உயில் நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற பிறகே சொத்தை மாற்ற முடியும்.
*ஒருவரின் பெயரில் உயில் இருந்தும் அவர் அதை நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற பிறகே சொத்தை அவர் பெயருக்கு மாற்ற முடியும் என்று கூறுகிறார்களே அது ஏன்??*
*இந்தியாவில் சார்டர்டு சிட்டீஸ் (CHARTERED CITIES) என்றழைக்கப்படும் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களின் வரையறைக்குள் சொத்து இருந்தாலோ அல்லது உயில் எழுதியவர் அந்த நகரில் வசித்திருந்தாலோ உயில் எழுதியவர் இறந்த பின் உயிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்ற பின்னரே வாரிசுதாரர் சொத்தை தனது பெயருக்கு உரிமை மாற்றம் செய்ய முடியும். இதை தவிர மற்ற இடங்களில் சொத்து இருந்தாலோ அல்லது உயிலை எழுதியவர் வசித்திருந்தாலோ நீதிமன்றத்தின் அங்கீகாரம் தேவையில்லை. நேரடியாக வாரிசுதாரர் உயிலை வைத்து சொத்தை தனது பெயருக்கு உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.*
Comments
Post a Comment