சென்னை உயர்நீதிமன்றம் " இலட்சுமிபதி மற்றுமொருவர் Vs A. M. சக்கரபாணி ரெட்டியார் (2001-1-CTC-112)" என்ற வழக்கில், கூட்டு பங்குரிமையாளர்கள் அசையாச் சொத்துக்களை வாய்மொழியாக பாகம் பிரித்து கொள்ளலாம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இருத்தபோதிலும் அந்தப் பாகப்பிரிவினை குறித்து ஓர் ஆவணம் எழுதப்பட்டிருந்தால், அதனை பதிவுச் சட்டம் பிரிவு 17 ன்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத ஓர் ஆவணத்தை பாகப்பிரிவினையை நிரூபிப்பதற்காக பயன்படுத்த முடியாது. ஆனால் அந்த ஆவணத்தை துணை நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே வாய்மொழியாக ஏற்பட்ட பாகப்பிரிவினையை பதிவு செய்து எழுதப்பட்ட ஆவணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை ஆவணத்தை துணை நோக்கங்களுக்காக சான்றாவணமாக குறியீடு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

A. S. No - 1039/2007

Dt - 5.1.2017

M.சென்னியப்பன் மற்றுமொருவர் Vs M. இரங்கநாதன் மற்றுமொருவர்

2017-3-MWN-CIVIL-74
2017-2-CTC-359

Comments