இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 134.

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 134
=============================================================

நீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, அது சம்பந்தமாக அதனுடன் இணைத்து நாம் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. 

இருந்தாலும், அதிக சாட்சிகள் அல்லது ஆவணங்களின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்புகள் வழங்குவதில்லை. நாம் ஜெயிப்பதற்கு வலுவான சாட்சி அல்லது ஆவணம் ஒன்று மட்டும் இருந்தாலே போதுமானதாகும். 

எந்த ஒரு வழக்கிலும், ஏதாவது ஒரு சங்கதியை மெய்ப்பிப்பதற்கு இத்தனை சாட்சிகள் வேண்டுமென்பது இல்லை என்று இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-134 தெளிவாகக் கூறுகிறது.

Comments