வரதட்சணை ஒழிப்புச் சட்டம்🍒.

வரதட்சணை ஒழிப்புச் சட்டம்
🍒

*இந்தியப் பெண்கள் சிலரின் வாழ்வில் திருமணம் என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது வரதட்சணை என்ற அரக்கன்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சமுதாயத்தில் புரையோடியிருந்த வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கும் வகையில், பெண்களுக்குச் சொத்து உரிமை தர அன்றைய அரசு முடிவெடுத்தது.*

*இந்து வாரிசுரிமை சட்டம் 1956’ இயற்றப்பட்ட போது பெண்களுக்கான சொத்துரிமை ஓரளவுக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும், இன்று வரை வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். பெண்கள் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் வரதட்சணையை ஒழிப்பதற்கான சிறப்புச் சட்டம் உருவாக்க குரல் எழுப்பியதின் அடிப்படையில், 1961ல் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் பல பரிசீலனைகளையும் விவாதங்களையும் தாண்டி இயற்றப்பட்டது.*

*இச்சட்டத்துக்கு இருமுறை சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பெண்களின் நிலை குறித்து விவாதிக்க ஏற்படுத்தப்பட்ட குழு, ‘படித்த இந்திய இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை ஒரு அவமானமாகக் கருதாமல், வெட்கமே இல்லாமல் அதில் தங்களை  ஈடுபடுத்திக் கொள்வது எந்தவிதத்திலும் நன்மை பயப்பதில்லை’ என்று தெரிவித்தது.*

*வரதட்சணை என்ற வார்த்தை எந்த ஒரு பொருளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திருமண பந்தத்தில் ஈடுபடும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினருக்கு கொடுக்கப்படுவது, ஒரு தரப்பினரின் பெற்றோரோ, வேறு நபரோ மறுதரப்பினருக்கு திருமணத்தின் போதோ,  திருமணம் முடிந்த பின்னரோ கொடுப்பது என்று இச்சட்டத்தின் படி கூறப்படுகிறது. இஸ்லாமிய திருமணத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் மெஹர் வரதட்சணை ஆகாது.*

*வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமே. இதற்கு 5 ஆண்டுகள்  வரை*
*அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை கொடுக்கப்படும். ரூ. 15 ஆயிரம் அல்லது வரதட்சணையாக* *பெறப்பட்ட பணமோ, பொருளோ அதற்கான மதிப்பீடு - இவற்றில் எது அதிகமோ அது அபராதமாகும்.* *நீதிமன்றம்*
*5 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை கொடுக்கும் பட்சத்தில், அதற்கான* *காரணங்களை தீர்ப்பில் தெளிவாக விவரிப்பது அவசியம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.*
* *திருமணத்தின்போது* *எந்தவித கட்டாயத்தாலோ, வற்புறுத்தலாலோ இல்லாமல், விருப்பத்துடன் கொடுக்கக்கூடிய ஆடை ஆபரணங்கள் போன்றவை - அவரவர்* *திருமண வழக்கப்படி கொடுக்கக்*
*கூடிய பொருட்கள் வரதட்சணையாகக் கருதப்பட மாட்டாது.*
* *உற்றார், உறவினர் அவரவர் தகுதியின் அடிப்படையில் விருப்பத்துடன் பரிசாக கொடுக்கும் பொருட்கள் வரதட்சணை ஆகாது.*
* *திருமணத்தின்போதோ, திருமணத்துக்குப் பிறகோ எந்தவித கட்டாயமும் இல்லாமல் பெண்ணின் பெற்றோரோ, உற்றார், உறவினரோ விருப்பத்தோடு* *கொடுக்கும் எந்த பொருளும் சீதனமே ஆகும். அப்பொருளுக்கு அந்தப் பெண்ணே முழு உரிமையாளராகிறார்.*
*ஒரு மணமகனுக்கு அவரவர் திருமண வழக்கப்படி எந்தவித வற்புறுத்தலோ,*
*கட்டாயமோ இல்லாமல்* *மணமகள் வீட்டாரால்*
*கொடுக்கப்படும்* *பரிசுப்பொருட்கள்*
*வரதட்சணையாகாது.*
*வரதட்சணை* *கோருவதே குற்றம்!*
*எந்த ஒரு நபரும்* *நேரடியாகவோ மறை*

*முகமாகவோ பெற்றோரிடமோ, காப்பாளரிடமிருந்தோ, உற்றார், உறவினரிடமிருந்தோ வரதட்சணை கோரி கட்டாயப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமே. இந்தக் குற்றத்துக்கு குறைந்தபட்சம் 6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரையிலும்,* *அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் அபராதத்துடன் கூடிய தண்டனையாகக் கொடுக்கப்படும்.*
*வரதட்சணை குறித்த விளம்பரத்துக்கான தடை எந்த ஒரு நபரும் நாளிதழ், பத்திரிகை அல்லது வேறு* *ஊடகங்கள் வாயிலாக தன் சொத்திலோ,* *தொழிலிலோ பங்காகவோ, பணமாகவோ தன்னுடைய மகனுக்கோ, மகளுக்கோ திருமணத்துக்காக தருவதாக வெளியிடுவது குற்றமாகும்.இவ்விளம்பரத்தை அச்சிடுவதோ, பதிப்பிடுவதோ, விநியோகிப்பதோ தண்டனைக்குரிய குற்றமே. இதற்கு 6 மாதத்திலிருந்து  5 ஆண்டுகள் வரை, அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் அபராதத்துடன் கூடிய தண்டனை கொடுக்கப்படும்.*

*வரதட்சணை கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் எவ்வித ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டாலும், அதுவும் சட்டப்படி செல்லாத ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படும்.*
* *திருமணத்தின்போது மணமகளின் சார்பாக வேறொரு நபர் திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ அவளுக்குச் சேரவேண்டிய பொருளை (அசையும் மற்றும் அசையாச் சொத்துகள்) பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவ்வாறு பெற்றுக்கொண்டதிலிருந்து 3 மாதங்களுக்குள் அந்த மணமகளிடம் ஒப்படைப்பது அவசியம்.*

* *அந்தப் பெண்ணுக்கு ஒருவேளை மரணம் சம்பவிக்கும் பட்சத்தில், அவளுடைய வாரிசுதாரர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. ஒரு* *வேளை அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள்* *மரணம் சம்பவிப்பின், அவளுக்கு குழந்தை இல்லாமல் இருப்பின், அவளுடைய* *பெற்றோரிடமோ, குழந்தை இருப்பின் அவர்களிடமோ,* *காப்பாளரிடமோ ஒப்படைக்கப்பட வேண்டும்.*
* *அவ்வாறு உரியவரிடம் உரிய நேரத்தில் பொருளை கொடுக்காத* *பட்சத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகள் வரை அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் கூடிய தண்டனை கொடுக்கப்படும். இந்தத்* *தண்டனையுடன், நீதிமன்றம் அந்தப் பொருளை குறித்த நேரத்துக்குள் உரியவருக்கோ, அவரது வாரிசுக்கோ திருப்பிக் கொடுக்கவோ அல்லது அதற்கு ஈடான மதிப்பை அபராதமாக பெற்று கொடுப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கவோ சட்டம்* *வழிவகை செய்துள்ளது.  வரதட்சணன* *வழக்குகள்வரதட்சணை வழக்குகளை முதன்மை குற்றவியல் நீதிபதி அல்லது மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்டிரேட் அந்தஸ்திலுள்ள* *நீதிபதி விசாரிக்க சட்டம் வழிவகை செய்துள்ளது.  நீதிமன்றம் தன்னிச்சையாக விவரம் அறிந்தோ, காவல் துறையின் அறிக்கை மூலமாகவோ* *இவ்வாறான வழக்கை ஏற்றுக்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட நபரோ, அவரது பெற்றோரோ, உறவினரோ, விவரம் அறிந்த சமூகநல அமைப்போ வழக்கு தாக்கல் செய்யலாம். இவ்வாறான* *வழக்குகளில் நீதிமன்ற முன்னறிவிப்பு இல்லாமலே காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய சட்டம் வழிவகை செய்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரே தான் குற்றமற்றவர் என்பதை* *நிரூபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் நிரூபணம் செய்ய* *அவசியம் இல்லை.* 
*வரதட்சணை தடுப்பு* *அலுவலர்* *கடமைகள்மாநில அரசுகள் இச்சட்டத்தின் கீழ் வரதட்சணை தடுப்பு* *அலுவலர்களை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பணி...*
*இச்சட்டத்தினை* *முறையாக* *அமல்படுத்த*
*முயற்சிகள்* *மேற்கொள்வது...*
* *வரதட்சணை கொடுப்பதையோ, வாங்குவதையோ, அதற்காகத் தூண்டுவதையோ தடுக்க முயற்சிகள் மேற்கொள்வது.*

*அவர்கள் பார்வைக்கு வரும் வரதட்சணை கொடுமை* *குற்றத்துக்கான போதிய*
*ஆதாரங்களை திரட்டுவது.*

*மாநில அரசாங்கம்* *கொடுக்கும் கூடுதல்*
*பொறுப்புகளையும் திறம்படச்* *செயல்படுத்துவது...மாநில அரசு வரதட்சணை ஒழிப்பு அலுவலரின் திறமையான செயல்பாட்டுக்காக ஆலோசனை குழு அமைக்கலாம். அது 5* *சமூக நல ஆர்வலர்களைக் கொண்ட குழுவாக செயல்படும். ஐவரில் குறைந்தபட்சம் இருவர் பெண்ணாக இருப்பது அவசியம். பெண்களை வரதட்சணை கொடுமையிலிருந்து தொடர்ந்து காப்பதற்காக மேற்கூறிய சட்டம்*
*மட்டுமின்றி, இந்திய தண்டனை சட்டமும் திருத்தம் செய்யப்பட்டு 498ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.*

*இப்பிரிவின்படி பெண்ணுக்கு கணவராலோ, அவருடைய* *குடும்பத்தாராலோ உடலளவிலோ மனதளவிலோ கொடுமை அல்லது வரதட்சணை* *அடிப்படையில்* *வன்கொடுமை நேரிடும்*
*போதும் அது* *தண்டனைக்குரிய* *குற்றமாகும். இதற்கு 3 ஆண்டு கள் வரை சிறைத்தண்டனையோடு அபராதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கோரி வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்படும் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டுவதோ, அவரின் உடல்நலத்துக்கோ, மனநலத்துக்கோ கேடு விளைவிக்கும் செயலோ, வரதட்சணை கேட்டு அந்த பெண்ணையோ, அவரைச் சார்ந்தவர்களையோ துன்புறுத்துதலோ தண்டனைக்குரிய குற்றமாகும்.*

*உதாரணமாக... ஒரு பெண்ணின் திருமணத்தின்போது கொடுத்த சீதனப்பொருட்களை குறை கூறி பேசுவதனால், அந்தப் பெண் மனம் பெரிதளவில் பாதிக்கப்படுவதுகூட இந்தச் சட்ட விதியின் கீழ் குற்றமாகும். வரதட்சணை மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றதால் இந்திய தண்டனைச் சட்டத்தில் 304பி என்ற புதிய பிரிவு இயற்றப்பட்டது. ஒரு பெண்ணின் மரணம் திருமணம் நடந்த 7 ஆண்டுகளுக்குள் துர்மரணமாக - அதாவது, உடல் காயத்தாலோ, உடல் எரிக்கப்பட்டோ அல்லது சாதாரண மரணத்துக்குப் புறம்பான ஒன்றாகவோ இருப்பின், அது வரதட்சணை மரணமாக கருதப்படும். வரதட்சணைக்காக கணவராலோ, அவர் குடும்பத்தாராலோ கொடுமைப்படுத்தப்பட்டதால் மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் அது தற்கொலையாக இருப்பினும், அது இந்தப் பிரிவின் கீழ் வரதட்சணை மரணமாக கருதப்படும். மேற்கூறிய குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில்* *குறைந்தபட்சம்*
*7 ஆண்டுகளிலிருந்து அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்*

*State of Punjab Vs Kirpal Singh ஒரு பெண்ணின் கணவரின் தாயாரும் சகோதரியும் அந்தப் பெண், பெண் குழந்தையை ஈன்றதாலும், குறைந்த வரதட்சணை கொண்டு வந்ததாலும் மேற்கொண்ட செயல்கள் அவளை தற்கொலை செய்ய தூண்டியது. அதனால் அந்தப் பெண் மரணமடைந்தார். இவ்வாறான மரணமும் வரதட்சணை மரணம் என்றே எடுத்துக்கொள்ளப்பட்டு, தண்டனை கொடுக்கப்பட்டது.*

*State of Punjab Vs Iqbal Singh ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பெண், 3 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். திருமணமானது முதலே, வரதட்சணை கொடுமை இருந்தது. காவல் துறையில் புகாரும் கொடுத்தார். கணவர், தன் நடத்தையை திருத்திக் கொள்வதாக உறுதியளித்ததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தார். இருப்பினும் கணவரிடம் எந்த மாற்றமும் ஏற்படாததால் அந்தப் பெண் இவ்வாறான முடிவுக்குத் தள்ளப்பட்டார். தற்கொலை செய்திருப்பினும் இம்மரணத்தை வரதட்சணை மரணம் என்று எடுத்துக்கொண்டு கணவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.* 

*Baldev Krishan Vs State of Punjab ஒரு இளம் மனைவிக்கு நெருப்புக் காயங்களால் மரணம் ஏற்பட்டு,* *சமையலறையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவளுடன் அந்த வீட்டில் வசித்து வந்த* *அவளுடைய கணவர் அந்த மரணத்துக்கு எந்தவிதமான சரியான விளக்கமும் கொடுக்க இயலாததால், சூழ்நிலை சாட்சியால் வரதட்சணை மரணம் என்று நிரூபிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் கணவருக்கு*
*தண்டனை வழங்கப்பட்டது.*

*Shanthi Vs State of Haryana வரதட்சணை கொடுமை மற்றும் மரணத்துக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் இ.பி.கோ 304பி பிரிவின் கீழ் விடுதலை பெற்றாலும், இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ பிரிவின் கீழ் தண்டனை கொடுப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.*

*Vidya Devi vs State Of Haryana திருமணத்தின் முன்னரோ, திருமண வேளையிலோ வலியுறுத்தப்படும் வரதட்சணை மட்டுமன்றி, திருமணம் முடிந்து வெகுநாட்கள் சென்றபிறகும் பொருள் கேட்டு துன்புறுத்துவதும் வரதட்சணை கொடுமையில் அடங்கும் என்று இவ்வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. *

*வரதட்சணை என்ற சமூக அவலத்தை சட்டத்துறையும் காவல்துறையும் மட்டுமே இரும்புக் கரங்களால் ஒழித்துவிட முடியும் என்பது பகல் கனவு. இந்தச் சமுதாயம் ஒன்றிணைந்து இந்த அவலத்திலிருந்து விடுபட காவல் துறைக்கும் சட்டத்துறைக்கும் தன் உதவிகளை நல்கினால் மட்டுமே வரதட்சணை இல்லாத ஒரு சமுதாயத்தினை வருங்காலத்தில் உருவாக்கிட முடியும்.* 

*வரதட்சணை என்ற சமூக அவலத்தை சட்டத்துறையும் காவல்துறையும் மட்டுமே இரும்புக் கரங்களால் ஒழித்துவிட முடியும்என்பது பகல் கனவு.*
*ஒரு பெண்ணின் திருமணத்தின்போது கொடுத்த சீதனப்பொருட்களை குறை கூறி பேசுவதனால் அந்தப் பெண் மனம் பாதிக்கப்படுவது கூட சட்ட விதியின் கீழ் குற்றமே*

Comments